Tuesday, May 8, 2018

Sunday, May 6, 2018

நான் சொல்லுவது எல்லாம்



நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லை. ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது........

Friday, May 4, 2018

என் எதிர்காலம்



திரும்பிக் கூட 
பார்க்காத உன்னை 
திரும்பத் திரும்ப 
பார்க்கிறேன் ...!!
ஒருநாள் 
என்னை 
திரும்பிப் 
பார்ப்பாய் என்று ...
நீ 
திரும்பிய 
போதுதான் 
தெரிந்தது.... 
என் 
எதிர்காலமே 
திரும்பியதென்று ...!!!

Wednesday, May 2, 2018

Monday, April 30, 2018

கானல் நீர்



கருவிழியின் இருவிழியால் 
என்னை ஒரு வழியாக்கினால்.. 
கானல் நீர் எனத்தெரிந்தும் 
காதல் என்னில் உன்னைக் 
காணும் அந்த நொடிகளில்..

கல்நெஞ்சக்காரி



கல்நெஞ்சக்காரி..! 
கல்லென்று நினைத்தாயோ 
என் இதயத்தை..? 
உளி கொண்டுடைக்க.? - உன் 
விழிகொண் டுடைத்தாலே 
போதும் விதியென்று 
மடிவேனடி..!!

Tuesday, October 3, 2017

உன் நினைவு



கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ...
ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்..

என் பலவீனங்களில் ஒன்று..................!!!



எவ்வளவு தான் நீ என்னை
விலக்கி வைத்து
காயப்படுத்தினாலும்
மீண்டும் மீண்டும் நான்
உன்னிடமே வருவது என் பலவீனங்களில் ஒன்று..................!!!

பேராசை



பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு 
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!

என்னுயிர் என்னிடம் இல்லை....!!



என் சங்கீதமும்
சந்தோஷமும்.....
என் கவலையும்
கண்ணீரும்....
எல்லாமே நீயென 
வாழும் என்
வாழ்க்கை......நீயில்லை
என்றால்
நிச்சயம்
என்னுயிர் என்னிடம் 
இல்லை....!!

விழித்திருக்கிறேன்



என் தூக்கத்தை தூங்க வைத்துவிட்டு 
விழித்திருக்கிறேன் 😃 
விழித்திரையில்  
உன் நிழற்படங்களை 💛 
நிஜப்படங்களாய் பார்த்துக்கொண்டு💖